காயங்களின் வடுக்கள் வழியே
எப்படியாவது
உள்ளே புகுந்து விடுகின்றன பூச்சிகள்.
பூச்சிகள்
ஊறும் சமயங்களில்
நாளங்கள் அதிர்கின்றன.
உள்ளம் ஒடுங்கி உறைகிறது.
ஒளிந்து கொள்ளும் பூச்சிகள்
எப்போது வெளிவருமென்ற
பதட்டத்தில்
ஒவ்வொரு பொழுதும்.
பூச்சிகள் வெளியே வந்தபோது
அவற்றிற்கு சிறகுகள் முளைத்திருந்தன.
ஆசுவாசமாய் இருந்தது.
எனக்கும் பூச்சிகளுக்கும்.
(குறிப்பு: 12.01.06 அன்று எழுதிய கவிதை.)
Advertisement
Tags: கவிதை