வெள்ளையன்
என்றொரு நண்பன்
எனக்கிருந்தான்.
பள்ளிவிட்டுத் திரும்பும்
இளவெயில்
பொழுதில்
எனக்கெனக் காத்திருப்பான்.
இந்த உலகத்தின்
பெருவெளிக்குள்
என்னை
முதன்முதலாக
அழைத்துச் சென்றவன்.
அவன் உலகத்தில்
என்னைத் தவிர
யாருமில்லை.
எல்லாப் புதிர்களும்
தன்னை அவிழ்த்து
எளிமையாய்
அவனிடம் நின்றன.
வார்த்தைகளும்
அர்த்தங்களும்
அற்ற ஒரு மொழியில்
என்னிடம் அவன்
பேசிக் கொண்டேயிருந்தான்.
காலத்தில் உறைந்து கிடக்கும்
அந்தக் கணங்களை
என் மகன் உணரும்
அந்தத் தருணத்தில்
வெள்ளையன்
மீண்டும்
உயிர்த்தெழுந்து வருவான்.
(குறிப்பு: 12.01.06 அன்று எழுதிய கவிதை.)
Advertisement
Tags: கவிதை