அன்பின் கணங்களுக்கும்
கைவிடப்பட்ட கணங்களுக்கும்
நடுவில் உள்ள
மிகமிகமிகமிகமிகமிகச் சிறிய இடைவெளியில்
கற்களும் பூக்களும்
அவரவர் கணங்களில் விழுகின்றன.
நல்லோரும் தீயோரும்
அந்தந்தக் கணங்களில் தோன்றுகிறார்கள்.
அவன் அறியாத ஆயிரம் கணங்கள்
பாதை வழி விரிந்தாலும்
அவன் அறிந்த ஒரு கணம்
எப்போதும் உண்டு.
அக்கணத்தில்
அவனுடைய கவிதை
அவனை அணைத்துக்கொள்ளும்.
(குறிப்பு: 04.03.07 அன்று எழுதிய கவிதை.)
Advertisement
Tags: பாதை