கரும்புள்ளிகள்
எதுவும் இல்லாத
வெண்மை நிற மனிதர்கள்
வசிக்கும்
தெருக்களின் வழியே
போகும்போது கவனமாய் இருங்கள்.
தங்கள் வீடுகளில் பத்திரமாய் இருக்கும் அவர்கள்
உங்கள் வருகையை எதிர்பார்த்துக்
காத்திருக்கிறார்கள்.
அவர்களின் வீடுகளில் ஏற்றப்பட்டிருக்கும்
வெண்ணிறக் கொடிகள்
என்றும்
அவர்கள் புகழ் பாடும்.
அதை விரும்பாத பாவனைகளோடு
உங்களை அன்போடு வீட்டிற்குள்
அரவணைத்துக் கொள்வார்கள்.
வெள்ளை நிறக் கடவுள்களும்
வெள்ளை நிற தேவதைகளும்
உங்கள் அருகே இருப்பதாக
நீங்கள் மதி மயங்கும் நேரம்
உங்கள் ரத்த நாளங்களை உறிஞ்சி எடுத்து
தங்கள் வாழ்நாள் தாகத்தைத் தீர்த்துக் கொள்வார்கள்.
பிறகு…
தங்கள் கொடிகளை
இன்னும் கொஞ்சம்
உயரப் பறக்கவிடுவார்கள்.
தங்கள் தெருவோரம்
உங்களுக்காக
கருஞ்சிலை ஒன்றினை
வைப்பார்கள்.
அந்தத் தெருக்களை
கவனமாய்க்
கடந்து செல்லுங்கள்.
சூட்சுமங்களால் ஆனது வாழ்க்கை.
19.10.2008
Tags: கவிதை