எல்லாக் கனவுகளையும்
இங்கே விட்டுவிடுகிறேன்.
சந்தோஷங்களும் துக்கங்களும்
இனி வேண்டா.
இருத்தலும் விருப்பும் வெறுப்பும்
இல்லா வெளியில்
நீயும் நானும் துரும்பிலும் துரும்பு.
கோடி மைல்களுக்கு அப்பால் இருக்கும்
கதிரவனில் கரையும் பனித்துளி
எங்கே போகிறது? எங்கே பிறக்கிறது?
பதில் இல்லாக் கேள்வியின் கொக்கிகள்
நீயும் நானும் நாமும்.
02.01.11
Advertisement